ஆப்கானிஸ்தானில் பெண் ஊடகவியலாளர் ஷப்னத்திற்கு தலிபான்களால் நடந்த கொடுமை.! நாட்டை விட்டு வெளியேற உதவி கோரும் பெண்.!!
“நீ ஒரு பெண், கணவனுக்கு சமைத்து கொடுத்து குழந்தைகளை கவனித்துக் கொண்டு வீட்டில் இரு”என ஆப்கானிஸ்தான் நாட்டின் தனியார் செய்தி நிறுவன தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணி புரிபவர் ஷப்னம் என்பவரை தலிபான் அமைப்பு வீட்டுக்கு திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தானை கடந்த வாரம் தலிபான் தீவிரவாத அமைப்பு முற்றாக கைப்பற்றியது, ஏராளமான உயிர் இழம்புகளின் பின் தலிபான் ஆட்சி ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வருகின்றது.
தலிபான் ஆட்சி மாறியதுடன் பெண்களுக்கான அடக்கு முறைகளும் அதிகரித்துள்ளது, இது குறித்து ஷப்னம் கூறுகையில் யார் ஆட்சி நடந்தாலும் ஊடகத் துறையை சார்ந்தவர்களுக்கு பணி இருக்கும், நான் காலையில் பணிக்குச் சென்றேன்,என்னை எனது அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை, வெளியே செல்லும் படி கூறினார்கள், ஏன் என்று கேட்டேன் அதன் போது பெண்கள் வீட்டில் இருந்தால் போதும் நீ இனி பணிக்கு வர வேண்டாம் என்றார்கள்,
எவளவோ எடுத்து சொன்னதும் மிரட்டி வீட்டிற்கு அனுப்பினார்கள். மனமுடைந்து போனேன்..தலிபான் ஆட்சியில் பெண் கல்வி, பெண் சுதந்திரம் இருக்கும் என ஏற்கனவே கூறினார்கள். ஆனால் வந்ததுமே பெண்களை அடிமைகளாக பார்க்க தொடங்கி விட்டார்கள்..இந்த நாட்டில் இருந்து வெளியேற ஆசை படுகின்றேன், முடிந்தவர்கள் உதவுங்கள் என கூறியுள்ளார். தலிபான் அமைப்பு ஆட்சிக்கு வந்ததுமே பெண்களின் ஆடைகள் பற்றி அறிவித்தது,
தற்போது பணி புரிவதற்கு தடை விதித்துள்ளது, அடுத்து பெண்களில் கல்வியில் தான் இவர்களது பார்வை இருக்கும் என் ஷப்னம் மேலும் தெரிவித்துள்ளார்.!!