சிங்கப்பூர் அதன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கடப்பாட்டைக் கூடிய விரைவில் மேம்படுத்தல்.!!!
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் படி சிங்கப்பூர் அதன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கடப்பாட்டைக் கூடிய விரைவில் மேம்படுத்தவுள்ளது. மட்ரிட்டில் இடம்பெறும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சநிலைச் சந்திப்பில், சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இதனை அறிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்க பலதரப்புக் கூட்டுறவுக் கட்டமைப்பு அவசியம் என்ற அவர் அதை வலுப்படுத்த இணைந்து செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் திரு. மசகோஸ் இணை ஒருங்கிணைப்பாளராக பங்கேற்றுள்ளார். இது அனைத்துலக எரிசக்திச் சந்தைக்கான விதிமுறைகளைத் தீர்மானிக்கும். அதைப் பின்பற்றுவதற்கான கடப்பாட்டை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாடும் தெரிவிக்கவேண்டும். சிங்கப்பூரும் தனது கடப்பாட்டைக் கூடிய விரைவில் அறிவிக்கும் என்ற திரு. மசகோஸ், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நீண்டகால உத்திகளையும் சிங்கப்பூர் அவர் முன்வைக்கும் முன்வைத்துள்ளார்.