” அநியாயமா கொன்னுடாங்க மா ” ரசிகையின் கேள்விக்கு கண்ணீருடன் பதில் சொன்ன சேரன்..! நடந்தது இது தானாம்..!!
திரைப்படம் ஒன்றை எடுப்பதற்கு தயாரிப்பாளர், இயக்குனர் மட்டும் இன்றி ஏராளமானவர்களின் அர்ப்பணிக்கப்பும் உழைப்பும் தேவைப்படுகின்றது. அவர்கள் அந்த திரைப்படத்திற்காக படும் கஷ்டத்தின் அளவே திரைப்படத்தின் வெற்றியை தீர்மாணிக்கிறது.
அப்படி அண்மையில் இயக்குனர் சேரன் எடுத்த திரைப்படம் ஒன்றை பார்த்த ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு சேரன் கோபமாக பதில் அளித்துள்ளார். அண்மையில் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்ற படம் ராஜாவுக்கு செக். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப் பட்ட போதும் பெரிதாக கொண்டாடப் படவில்லை.
இந்த திரைப்படத்தை அமேஸனில் பார்த்த பெண் ஒருவர் சார் படம் அமேஸானில் பார்த்தேன், திரில்லர், சஸ்பென்ஸ் என சூப்பராக இருக்கு என கூறியுள்ளார். இதனை பார்த்த சேரன் ஒரு திரைப்படத்தை எடுக்க எவ்வள கஷ்டப் பட வேண்டும், ராஜவிற்கு செக் திரைப்படம் பலரது இரத்தம் உள்ளது.. “.அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா….
அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு… ” என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உண்மையில் சேரன் சொல்வது சரி தான் என ஆதரவு தெரிவித்துள்ளனர்…!!
அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு… https://t.co/FmU3WEpt2e
— Cheran (@directorcheran) March 19, 2020