பிக் பாஸ் வீட்டில் பாலாஜியை தான் பிடிக்கும், ஆரி பற்றிய கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன ஆஜித்.!!
பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது வாரமே நாமினேஷனில் வந்து எவிக்ஷன் ப்றீ பாஸ் மூலம் தப்பியவர் சூப்பர் சிங்கர் ஆஜித். 89 நாட்கள் வீட்டில் இருந்த ஆஜித் பின் வெளியேற்றப் பட்டார். வெளியே வந்ததும் ஆஜித்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் சரி அளவாக இருந்தது.
பிக் பாஸ் கொண்டாட்டம் முடிந்து அனைவரும் தங்கள் அன்றாடம் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் பிரபல சேனல் ஒன்று ஆஜித்திடம் பேட்டி கண்டுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்தவர் யார் என்ற கேள்விக்கு கண்டிப்பாக பாலா தான் என கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் என்னிடம் அதிக நெருக்கமாக இருந்தது பாலா மற்றும் கேப்ரியலா தான். இவர்களுடன் இறுதி வரை நல்ல நட்பாக இருந்தேன். மற்றவர்கள் என்னை ஓரம்கட்ட முயன்றனர். குறை சொல்லி வெளியே அனுப்ப முயன்றனர். ஆனால் பாலா என்னை வைத்திருக்க விரும்பினார்.
அடுத்து கேப்ரியலா, மற்றும் சம்யுக்தாவை பிடிக்கும் என கூறியுள்ளார். அடுத்து ஆரி பற்றி ஒரு வார்த்தையில் கூற சொன்னதற்கு “பொறுமையாளர்” ஆரி அண்ணாவை போல் யாராலும் பொறுமையாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.
பிக் பாஸில் ஷிவானி எப்படி என கேட்டபோது ஆரம்பத்தில் அவரை பிடிக்கவில்லை, ஆனால் இறுதி நாட்களில் நல்ல நண்பர்களானோம், ஷிவானியின் மொக்க ஜோக் பிக் பாஸ் போட்டியாளர்கள் இடம் மிகவும் பிரபலம் என கூறியுள்ளார்.!!