பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை வெற்றிபெற வைத்த குழந்தை ருத்ரா திடீர் மரணம்.! ஆரி பகிர்ந்துள்ள குழந்தையின் இறுதி வீடியோ.! எங்கள் ஆழ்ந்த இரங்கல்.!!
பிக் பாஸ் வீட்டில் நடிகர் ஆரி இருந்த போது வைத்தியசாலையில் இருந்தபடி நாளொன்றுக்கு 50 வாக்குகள் ஆரிக்கு அளித்த சிறுமி ருத்ரா சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி ஆரியையும் ஆரி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 4 வயதான சிறுமி ருத்ரா தண்டுவடத்தில் ஏற்படும் அரியவகை நோயால் பாதிக்கப் பட்டு, வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
வைத்தியசாலையில் இருக்கும் போது அவரது தந்தையின் மொபைல் போனில் பிக் பாஸ் சீசன் 4 பார்ப்பதை சிறுமி ருத்ரா, வழக்கமாக கொண்டிருந்தார். பிக் பாஸில் ஆரியை இவருக்கு பிடித்துப் போக வாக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை வீடியோ எடுத்த பெற்றோர் அப்போது இணைய தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
ஆரி வெற்றி பெற்ற போது ஆரியை விட ருத்ராவே மகிழ்ந்திருந்தார். ருத்ரா ஆரியை சந்திக்க விரும்பிய போதும் ஆரிக்கு செல்ல நேரம் கிடைக்கவில்லை, அத்துடன் கொரோனா பிரச்சனை காரணமாக செல்ல முடியவில்லை. இந்த நிலையில் குழந்தை ருத்ரா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த தகவல் இணையத்தில் பகிர குழந்தையின் மரணம் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக ஆரி தெரிவித்து குழந்தையின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.!