பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆரி.?? அடுத்த வாரம் இது தான் நடக்கப் போகிறதா..?
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆரி வெளியேற்றப்பட போகிறார் என்ற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன்களில் இறுதி நாமினேஷன் வாரத்தில் 6 பேர் மாத்திரமே இருப்பார்கள். இதில் ஒருவர் எவிக்ட் ஆகி செல்ல மீதமிருக்கும் 5 பேரில் ஒருவர் பிக் பாஸ் கொடுக்கும் பணத்தை பெற்று வெளியேறுவார். 4 பேர் பைனல் செல்வார்கள்.
வழக்கமாக இதுவே நடந்தது. ஆனால் இந்த வாரம் வித்தியாசமாக மாறியுள்ளது. இறுதி நாமினேஷன் வாரத்தில் 7 பேர் இருக்கின்றார்கள். இதில் இருவர் கண்டிப்பாக வெளியேற வேண்டும். இந்த வாரம் இரண்டு பேர் வெளியேறினால் ஒருவர் பணத்துடன் வெளியேறுவார். இந்த பணத்துடன் வெளியேறுபவர் ஆரி என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பலமுறை எனக்கு டைட்டில் தேவையில்லை என ஆரி கூறி வருகின்றார். அத்துடன் பிரபல தொலைகாட்சியும் ரியோவை வெற்றி பெற வைக்கவே முயற்சி செய்கிறது. அப்படி பார்த்தால் ஆரி இம்முறை வெளியேற்றப் பட மாட்டார், ஆனால் தனது விருப்பத்தின் பேரில் வெளியே செல்வதாக செல்லக் கூடும் என்ற விடயம் வைரலாகியுள்ளது.
தொலைகாட்சியால் ஆரி இருக்கு போது டைட்டிலை ரியோவிற்கு கொடுக்க முடியாது, அதனால் இப்படி ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகின்றது.!!