சித்துவிற்கு போதை பழக்கம் இல்லவே இல்லை, அவர் கொலை செய்யப் பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது…சித்துவின் தாய் அதிரடி.!! இதோ சித்துவின் அறையின் Video.!!
விஜே சித்ராவின் மரணத்தின் பின் அவரது குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக சித்ராவின் தாயார் பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதன் படி பொலீஸார் ஹேமந்தின் பக்கம் நிற்பதால் சித்து மரணத்திற்கு நீதி கிடைக்காது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்ராவின் பையில் போதை பொருட்கள் இருந்ததாகவும், அதனை யார் சித்துவிற்கு விற்பனை செய்தார்கள் என்பதையும் தேடி வருவதாக பொலீஸார் தெரிவித்தனர். இதனை ஹேமந்தின் குடும்பத்தினர் சித்ரா வீட்டில் மினி பார் ஒன்றே இருக்கிறது என்றும் சித்ராவின் அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மது பாட்டில்கள் நிறைந்து இருக்கும் எனவும் கூறிவருகின்றனர்.
இந்த பொய்யான குற்றச் சாட்டுகளால் சித்துவின் குடும்பம் மனமுடைந்து போய் உள்ளது. சித்ராவின் வீட்டிற்கு சென்ற பிரபல மீடியாவிற்கு சித்துவின் அறையை காட்டிய தாயார் என் வீட்டில் பார் இல்லை, என் மகள் போதை பொருள் பாவிப்பதும் இல்லை, சிறு வயதில் இருந்தே மிகவும் கஷ்டப் பட்டு முன்னுக்கு வந்தவள்.
நன்றாக படித்து எங்கள் ஆசையை நிறைவேற்றியவள். அவளை கொலை செய்து விட்டனர். தற்போது கொலையாளிக்கு பொலீஸார் ஆதரவு கொடுக்கின்றனர். இதனால் சித்து கொலை செய்யப் பட்டுள்ளதற்கான ஆதாரங்களை பொலீஸாரிடம் கொடுக்க முடியாது. எங்களிடன் ஹேமந்திற்கு எதிரான சாட்சிகள் உள்ளது,
அதனால் தான் சிபிசிஐடி விசாரணையை கேட்டுள்ளோம், கண்டிப்பாக எங்கள் மகளை கொலை செய்த குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அது வரை எம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என தெரிவித்துள்ளார்.!!