பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு கதறி அழுத ஆரி.!! காரணம் இது தானா.??
பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வெற்றிபெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுபவர் ஆரி. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆரிக்கு பெயர் சொல்லும் படியாக திரைப்படங்கள் அமையவில்லை. இதனால் சமூக சேவை, விவசாயம், கிராமிய கலைகள் என கிராம மக்களுக்கு உதவினார். இதனால் ஆரிக்கு மக்கள் மத்தியில் மதிப்பு அதிகமாகியது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு ஆரியின் செயல்கள் பிடிக்காவிட்டாலும் போட்டியாளர்கள் ஆரியை வெறுத்ததால் ரசிகர்கள் நேசிக்க தொடங்கினார்கள்..இதனால் தற்போது பைனல் வரை வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் பழைய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர். பழைய போட்டியாளர்களுடன் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஆரி நிஷாவிட.ம் பேசிக்கொண்டிருக்கின்றார். இதன் போது மற்றவர்கள் தன்னை பொறாமை பிடித்தவன்,
குறை சொல்றவன் என்றெல்லாம் சொல்கிறார்கள் நான் அப்படி இல்லை, அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தான் கடுமையாக நடந்துகொண்டேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். நிஷா அவரை அழ வேண்டாம் என தேற்றியுள்ளார்.!!