நடிகர் ஆர்யா திருமணம் செய்வதாக கூறி ஜேர்மனியில் வசிக்கும் யுவதியிடம் பணம் வாங்கி ஏமாற்றினாரா.? நடந்தது என்ன.? முதல் முறை ஆர்யாவின் செயல் பற்றி பேசிய மனைவி நடிகை சாயிஷா.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெர்மனி சுகாதார துறையில் பணி புரியும் விட்ஜா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியதுடன் பட வாய்ப்பு இல்லை என கூறி பணம் பெற்றதாகவும் திருமணம் செய்துகொள்வேன் என உறுதியளித்ததாகவும் தெரிவித்து பிரதமர், மற்றும் குடியரசு தலைவருக்கு ஒன்லைன் புகார் அளித்திருந்தார்.
ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்த பின் பணத்தை திருப்பி கேட்டதற்கு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியதாகவும், ஆர்யாவின் தாயார் தகாத வார்த்தைகளால் குறித்த பெண்ணை திட்டியதாகவும் புகாரில் கூறியிருந்தார். விட்ஜா தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும் இந்திய அரசு தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆர்யா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை, அத்துடன் இது பற்றி பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆர்யாவின் மனைவி சாயிஷாவிடம் இது பற்றி கேட்டபோது இது தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாது என தெரிவித்த அவர் திருமணத்திற்கு முன் நடந்ததாக குறித்த பெண் கூறி இருக்கிறார், ஆர்யா இதனை செய்திருந்தால் கண்டிப்பாக தவறான செயலாகும்.
விட்ஜா ஆர்யாவின் தாயாரும் இதற்கு துணை போனதாக கூறுகிறார். உண்மை என்னவென்று தெரியாது. ஆர்யா அப்படி செய்திருக்க மாட்டார், அவரிடம் பணம் இருக்கிறது, சிலர் பிரபலமடைவதற்காகவும் இது போல் செய்யலாம், பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.!!