இன்றைய ராசி பலன் – 04.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 04-03-2021, மாசி 20, வியாழக்கிழமை, சஷ்டி திதி இரவு 09.59 வரை பின்பு தேய்பிறை சப்தமி. விசாகம் நட்சத்திரம் இரவு 11.57 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:
மாலை 06.20 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர் பார்த்த காரியம் இழுபறியாகும். தாயார் வகையில் மருத்துவச் செலவுகள், அலைச்சல் இருக்கும்.பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வேலையில் உடனிருப்பவர்களால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும்.
ரிஷப ராசி அன்பர்களே:
பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுக்கு யோகம் உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:
உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். குடும்பத் தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.திடீர் வெளிநாட்டு பயணத்திற்கு வாய்ப்புள்ளது. தந்தைவழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். மனதில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.. மாமன் வகை உறவுகளால் ஆதாயம் வரும்.
கடக ராசி நேயர்களே:
உடனிருப்பவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.நண்பர்களுடன் பட்டும் படாமல் இருப்பது நல்லது. இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
தாய் வழி உறவுகளால் அலைச்சல், செலவுகள் வரும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி யிருக்கும்.வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்களிடம் பேசும்போது பணிவு மிக அவசியம்.
கன்னி ராசி காரர்களே:
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக் கவும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும்.
துலாராசி உறவுகளே:
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. கண் சம்மந்தமான உபாதைகள் மருத்துவ சிகிச்சைகள் வந்து போகும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.மனஅழுத்தம் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:
அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வீண் அலைச்சல், பயணங்கள், செலவுகள் இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.
மகர ராசி காரர்களே:
உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.தொழில் சீராக இருக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும்.தாய்வழி உறவுகளால் செலவுகள் இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
கும்ப ராசி உறவுகளே:
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தேவைகள் பூர்த்தியாகும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும்.அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான நேரம்.மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மீன ராசி நேயர்களே:
மாலை 06.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும்.எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் சற்று மந்தமாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.