ரசிகைகளின் சாக்லேட் Boyயாக இருந்த அப்பாஸ் சினிமாவை விட்டு சென்றதற்கு இது தான் காரணமாம்.! அப்பாஸ் கொடுத்த பேட்டியால் அதிர்ந்த ரசிகர்கள்.!!
90களில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் நடிகர் அப்பாஸ். “காதல் தேசம்” திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்த அப்பாஸுக்கு வாய்ப்புகள் குவிந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தினார்.
அதன் பின் வாய்ப்பு குறைய சீரியல்களில் நடித்தார். அத்துடன் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். திடீரென சினிமாவை விட்டு ஒதுங்கிய அப்பாஸ் வெளி நாட்டில் மனைவி குழந்தைகளுடன் குடியேறினார். தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் அப்பாஸ் அண்மையில் இந்தியா வந்த போது பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
குறித்த பேட்டியில் சினிமாவை மிகவும் பிடித்தே நடிக்க ஆரம்பித்தேன், ஒரு கட்டத்திற்கு மேல் பணம் தான் சினிமா என்றானது. சிறந்த நடிப்புக்கு இடம் குறைந்து பணத்திற்கு இடம் அதிகரித்தது. இதனால் சினிமா போர் அடித்தது.
கதையே இல்லை என்றாலும் அதனை ரசிகர்களும் கொண்டாடினார்கள். நல்ல திரைப்படங்கள் எடு படாமல் போனது. சினிமா வெறுத்து போனது, அதனால் சினிமாவை விட்டு விலகிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.!!