பிக் பாஸ் வீட்டில் உருவான கள்ளக் காதல்..! பிரியும் நிலையில் குடும்பம்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் குடும்பங்கள் பிரியலாம் என மக்கள் கூறி வந்த நிலையில் தற்போது போட்டியாளரின் குடும்பமே பிரியும் நிலைக்கு சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களில் மக்களின் வாக்குகள் இல்லாவிட்டாலும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப் படுபவர் அபினய்.
சாவித்திரி ஜெமினி கணேஷனின் பேரனான அபினய் வீட்டிற்குள் வந்ததில் இருந்து என்ன செய்தார் என கேட்டால் ஏதும் இல்லை தான்,ஒவ்வொரு முறையும் நாமினேஷனில் வரும் போதும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ஆனால் காப்பாற்றப் பட்டு விடுவார். இது பலரிடம் கடுப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அபினய் அடிக்கடி காப்பாற்றப் படுவது ஏன் என்ற கேள்வி பலரிடம் இருந்தது.
தற்போது பவ்னி அபினய் காதலால் அதிர்ந்து போய் உள்ளது பிக் பாஸ் டீம். ஏற்கனவே திருமணமாகி பவ்னி கணவரை இழந்த நிலையில், அபினவ் மனைவியுடனும் குழந்தையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நன்பர்களாக இருந்த அபினய் பவ்னி தற்போது வேறு பதையில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
அபினய் மீது காதல் இருப்பதாக ராஜுவிடம் பவ்னி கூறிய குறும்படம் போடப்பட்டதை தொடர்ந்து என்ன காதல் இது என கேட்கும் அளவிற்கு பிரச்சனை வெடித்துள்ளது, இந்த காதல் பவ்னிக்கு பெரிய அளவில் பாதிக்கா விட்டாலும் அபினயின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப் படும் என கூறப்படுகின்றது, அத்துடன் அபினய் மனைவி இது தொடர்பாக ஏற்கனவே பதிவொன்றை பதிவிட்டிருந்தார். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கும்.!