“என் குடும்பத்தினரால் தப்பினேன்” பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபினய் போட்ட பதிவு. கலாய்க்கும் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னை தவறாக காட்டிய போதிலும் என் குடும்பத்தினரின் நம்பிக்கையால் தப்பித்தேன் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபினய் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரான ஜெமினி கணேசன் அவர்களின் பேரனான அபினய் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 78 நாட்கள் இருந்தார்.
முதல் வாரங்களிலேயே வெளியேற்றப் படுவார் என எதிர்பார்க்கப் பட்ட அபினய் 78 நாட்கள் இருந்தது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த வாரம் வெளியேற்றப் பட்டார். ஆனால் வீட்டிற்குள் இருக்கும் போது அபினய் மீது பல குற்றச் சாட்டுகள் இருந்தது, அதில் ஒன்று பவ்னி மீதான காதல்.
வெளியே இருக்கும் போதே பவ்னியை பிடிக்கும் பிடிக்கும் என கூறி வந்த அபினய் வீட்டிற்குள் சென்றதும் நல்ல நண்பராக மட்டும் இன்றி காதலிலும் விழுந்தார். இது அதிகம் பேசப்பட்டது.ஆனால் அபினய் அவர்களின் மனைவி தனது கணவர் மிகவும் நல்லவர் என கூறி வந்தார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் குடும்பத்தினர் அனைவரும் அபினய் க்கு ஆறுதலாக இருந்ததுடன் இது இரு விளையாட்டு மறந்து விடுங்கள் என ஆறுதல் கூறி உள்ளனர். இதனை அபினய் பதிவாக வெளியிட்டுள்ளார்.!