இன்றைய ராசி பலன் – 26.12.2021
இன்றைய பஞ்சாங்கம், 26-12-2021, மார்கழி 11, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 08.08 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 05.25 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 05.25 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் . புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.எதிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டிய நாள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மிதுன ராசி காரர்களே:பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.
கடக ராசி நேயர்களே: காரியங்க ளில் அனுகூலம் உண்டாகும்.குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் மனஸ் தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும்.சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
துலாராசி உறவுகளே:நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாயின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். புதிய முயற்சிகளில் நன்கு சிந்தித்து ஈடு படவும்.மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மகர ராசி காரர்களே:ராசிக்கு பகல் 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.எடுக்கும் முயற்சிகளில் மதியத்திற்கு பின் சாதகப்பலன் கிட்டும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம்.
கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு பகல் 11.14 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணை உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே:
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும்.குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். திருமண தடைகள் விலகும்.கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.