பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப் பட்ட 2 போட்டியாளர்கள்.! சோகத்தில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எப்போது யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என பலரும் சோகத்தில் இருக்க இம்முறை ஒரே நேரத்தில் இருவர் வெளியேறி உள்ளனர். இறுதி வரை வருவார் என எதிர்பார்க்கப் பட்ட ஒருவரும் ஆரம்பத்திலேயே வெளியேற்றப் பட்டுவிடுவார் என நினைத்த ஒருவருமே இவ்வாறு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து எதுவும் செய்யாமல் இருந்த போட்டியாளர் என்றால் அது வருண் தான். பெரிதாக நாமினேஷனில் வராத வருண் ஓரளவு தப்பினார். அதன் பின் அக்ஷராவுடன் காதல் என்பதால் பிக் பாஸ் குழுவினரால் காப்பாற்றப் பட்டார். பிக் பாஸ் வீட்டில் அக்ஷராவிற்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள். இவரது அழகு பல இளைஞர்களை கவர்ந்திருந்தது.
ஆனால் அக்ஷரா ஒரு கட்டத்திற்கு மேல் பிக் பாஸ் வீட்டில் வெட்டியாக சுற்ற ஆரம்பித்தார். அடுத்தவர் மீது குற்றப் சொல்வது பின்னால் பேசுவது என் தொடங்கியதால் அக்ஷராவிற்கு ரசிகர்கள் குறைந்தார்கள். இதனால் வாக்குகள் குறைந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக அக்ஷரா மற்றும் வரும் இன்றைய தினம் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
வருண் வெட்டியாக வீட்டில் இருந்ததால் வருண் மீது பெரிதாக எதிர்பார்ப்பு இருக்கவில்லை, ஆனால் அக்ஷரா பைனல் வரை வருவார் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இன்றைய தினம் அக்ஷரா வருண் இருவரும் ஜோடியாக வெளியேற்றப் பட்டுள்ளனர்.!