நடிகர் விஜயகாந்தின் நிலையை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மனோபாலா..! விஜயகாந்திற்கு என்னாகிற்று.!?
நடிகர் விஜயகாந்தின் உடல் நிலை பற்றி பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா அவர்கள் விஜய்காந்த் பற்றி உருக்கமாக பேசிய விடயம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகாந்த் குறித்து மனோபாலா கூறியுள்ளதாவது..தமிழ் சினிமாவில் இன்று பல நட்சத்திர நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜயகாந்த் தான்.
ஒருவர் வளர்ந்தால் மற்றவர் பொறாமைபடும் இந்த காலத்தில் தன்னுடன் இருப்பவர்களாகட்டும், தன்னை நாடி வந்தவர்களாட்டும் அனைவருமே வளர வேண்டும் என நினைத்த ஒரே மனிதர். அரசியல் ரீதியாக எனக்கும் விஜகாந்திற்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்தாலும் அவரது நேர்மை மற்றும் மனித நேயம், தமிழ் பற்று ஆகியவற்றை கண்டு வியந்துள்ளேன்,
தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்ததுடன் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வரும் வரை தனது பிறந்த நாளை கூட கொண்டாட மாட்டேன் என உறுதியாக இருந்தவர். விஜயகாந்த் வீட்டிற்கு பிரபலமாக இருக்கட்டும் பரதேசியாக இருக்கட்டும் யார் என்றாலும் பசியோடு திரும்ப மாட்டார்கள். தமிழ் சினிமாவில் உள்ள எந்த ஒரு நடிகரும் செய்யாத செயலை விஜயகாந்த் செய்வார்.
ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கானோருக்கு உணவு சமைத்து போட்ட ஒரே நடிகர் விஜயகாந்த் மட்டும் தான். அவரது கர்ஜனை குரலுக்கு நான் கூட பயப்படுவேன் அப்பிடி இருந்த விஜயகாந்தை அண்மையில் விழா ஒன்றில் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன். என்னை பார்த்துக் கொண்டே இருந்தார் அந்த பார்வை அறியாத குழந்தை பார்ப்பது போல் இருந்தது.
பிரேமலதா என்னை யார் என விஜயகாந்திற்கு கூறினார் நான் அருகில் சென்றேன். என் கைகளை பற்றியவர் அழுத்திய அழுத்தம் கதறி அழ தோன்றியது. என்னுடன் சத்தியராஜ் செல்வமணி போன்றோர் இருந்தனர். விஜயகாந்திற்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அவரை பார்த்து எங்கள் விழிகள் நனைந்தது. எங்களுக்கு இப்போது தேவை நாம் பார்த்து வியந்த பயந்த அந்த விஜயகாந்த் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!