நடிகர் கமலஹாசனால் சினிமாவை விட்டுப்போன நடிகை மாதவி.! இப்படி எல்லாம் செய்தாரா நடிகர் கமலஹாசன், கமலஹசனின் இன்னுமொரு முகம் இது தான்.!!
70களில் அறிமுகமாகி 17 வருடங்கள் சுமார் 300க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாதவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உட்பட அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து உச்சம் தொட்ட இவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் நடிகர் கமலஹாசன். அன்றைய காலத்தில் கமலஹாசன் மாதவி இணைந்து நடித்த திரைபடங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, ஆனால் அதிக கிசுகிசுக்கள் வந்தது.
கமலஹாசனும் மாதவியும் காதலிக்கிறார்கள் என தொடங்கி இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்று வதந்திகள் பரவியது, இதனை பலமுறை மறுத்த போதும் நம்பும் நிலையில் யாரும் இல்லை, ஆனால் கமலஹாசன் இது பற்றி வாய் திறக்கவில்லை, சில திரைப்படங்களில் மாதவி தான் ஹீரோயினாக வேண்டும் என கமலஹாசன் அடம்பிடித்து நடிக்க வைத்ததுண்டு.
இதில் இருந்து மீள நினைத்த மாதவி ரஜினிகாந்திடம் அறிவுறை கேட்க அவர் தனது ஆன்மீக குருவின் சீடரிடம் மாதவியை அனுப்பியுள்ளார். அவரை சந்தித்து ஆசி பெற்ற மாதவி குறித்த சுவாமியின் அறிவுரை படி கடல் கடந்து செல்ல முடிவு எடுத்துள்ளார்.
வியாபாரம் ஆரம்பித்து அனைத்தையும் இழந்த அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். பின் அமெரிக்கா சென்ற மாதவி சினிமாற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இரண்டு குழந்தைகள் கணவர் என அமெரிக்காவில் வாழும் மாதவி, கணவருடன் இணைந்து ஆரம்பித்த வியாபாரம் கைகொடுக்க தற்போது தொழிலதிபர் ஆக இருக்கின்றார்.
சுவாமிஜியின் அறிவுரை படி 30 ஆண்டுகளுக்கு இந்தியா வரமாட்டேன் என கூறிய மாதவி 30 ஆண்டுகள் கடந்த பின்பும் வரவில்லையாம். நடிகர் ரஜினிகாந்துடன் அடிக்கடி வரும் பேசும் மாதவி கமலஹாசனை மட்டும் ஒதுக்கியே வைத்துவிட்டாராம். அத்துடன் கமலஹாசன் அன்று தொல்லை செய்து இருக்காவிட்டால் இன்றும் நடிகையாக இருந்திருப்பேன் என கூறி வருகின்றாராம் மாதவி.!