37 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் வாழும் நடிகை சதா.! திருமணம் செய்யாததற்கு இது தான் காரணமாம்.!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சதா. மாதவன், ஜெயம்ரவி உட்பட இளம் ஹீரோக்களுடன் நடித்த சதா பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போனார். நீண்ட நாட்களின் பின் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சதா,
சினிமாவில் புதுமுக நடிகைகளின் வரவால் எமக்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுகிறது, இது வழமை தான். வாய்ப்புகள் இல்லாததால் சற்று ஒதுங்கி இருந்தேன் இப்போது சில கதைகள் கேட்டு வருகிறேன் என கூறியுள்ளார். சதாவிடம் திருமணம் பற்றி பேசியபோது திருமணத்தின் மீது விருப்பம் இல்லை.
உலகில் யாரையும் நம்ப முடியவில்லை அதனால் தான் திருமணம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். 37 வயதாகிவிட்டதே இனி எப்போது திருமணம் என்ற கேள்விக்கு வயது ஒரு விடயம் அல்ல. 20 வயதில் திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகவும் இல்லை,
40 வயதில் திருமணம் செய்தவர்கள் மகிழ்ச்சி இல்லாமலும் இல்லை, எல்லாம் மனசு தான், எனக்கு பிடித்தவன் கிடைத்தால் நான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்துள்ளார்.!!