நடிகர் ஆர்யா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு முடித்து வைப்பு.! இதெல்லாம் நாடகம் என திட்டி தீர்க்கும் நெட்டிஷ்சன்கள்.!!
நீதிமன்றில் ஆர்யா வருத்தம் தெரிவித்ததால் சில வருடங்களாக பேசப் பட்ட வழக்கு ஒன்று முடிவுக்கு வந்துள்ளது. நடிகர் ஆரியா மற்றும் விஷாலின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அவன் இவன்.
இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் விஷால் வித்தியாசமாக நடித்திருப்பார்கள். அவன் இவன் திரைப்படத்தில் ஆர்யா “சிங்கப்பட்டி” ஜமீனை அவமதிப்பது போல் பேசியதாக வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.
இதன் போது நீதிபதிகள் ஆர்யாவை நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தும் படி கூறியதை தொடர்ந்து நீதிமன்றம் வந்ததுடன் திரைப்படத்தில் பேசப்பட்ட அந்த வார்த்தைக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியதுடன் இதற்காக தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.
ஆர்யா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வழக்கு முடித்து வைக்கப் பட்டுள்ளது.!!