பிரபல தொகுப்பாளினி, சீரியல் நடிகை மர்ம மரணம்..! தலைகீழாக சடலத்தை கைப்பற்றிய பொலீஸார்..!!
பிரபல தொகுப்பாளினி , சீரியல் நடிகை சாந்தி வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த விடயம் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
இந்த நிலையில் 144 தடை சட்டம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள எல்லாரெட்டி குடா பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரது வீடு மூடியே இருந்ததால் சந்தேகமடைந்த மக்கள் எஸ்.ஆர்.நகர் பொலீஸாருக்கு அறிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்ற போது அங்கு சாந்தி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். கட்டிலில் இரண்டு கால்களும் தலை கீழாகவும் இருந்துள்ளது. அத்துடன் மது போத்தல், ஸ்னாக்ஸ் போன்றவையும் இருந்துள்ளது.
இந்த நிலையில் சாந்தியின் மொபைலை கைபற்றியுள்ள பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!!