பொலீஸில் பரபரப்பு புகார் கொடுத்த நடிகை சோபனா.! பொலீஸ் விசாரணை ஆரம்பம்.!!
நடிகை சோபனா பொலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தளபதி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்றவர் நடிகை சோபனா. பிரபல பரத நாட்டிய கலைஞரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என ஏராளமான திரைப்படங்களில் நடித்து விருதுகளை வாங்கிக் குவித்தார்.
இந்தியாவை பொறுத்த வரை பரதம் என்றால் சோபனா, சோபனா என்றால் நடனம், அனைவராலும் கொண்டாடப் படும் சோபானா ஏன் புகார் கொடுத்தார் என்ற விடயம் தற்போது வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் உறவுக்காரர் ஒருவருடன் பேசிவிட்டு த்னது மொபைல் போனை மேசையில் வைத்துள்ளார்.
பின்னர் வீட்டை துடைத்து சுத்தம் செய்துவிட்டு வந்து பார்த்த போது மொபைல் போன் காணாமல் போய் உள்ளது. வீட்டை விட்டு 2 நாட்களாக வெளியே சோபனா போகாத நிலையில் போன் காணாமல் போய் உள்ளது. விலை உயர்ந்த போன் மட்டும் இன்றி முக்கிய பல விடயங்கள் குறித்த போனில் உள்ளதாக சோபனா கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போன் காணாமல் போனதுமே ஸ்விட்ச் ஆப் செய்யப் பட்டு விட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.!