இன்றைய ராசி பலன் – 04.08.2021
இன்றைய பஞ்சாங்கம், 04-08-2021, ஆடி 19, புதன்கிழமை, ஏகாதசி திதி பகல் 03.18 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்படும் என்றாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். கணவன்- மனைவிக்குள் அன்னியோயம் அதிகரிக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:டும்பத்தில் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும்.சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளை களிடம் அனுசரித்துச் செல்லவும்.
மிதுன ராசி காரர்களே:சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள்.யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கணவன்- மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.
கடக ராசி நேயர்களே:சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.உத்தியோக ரீதியாக சிலருக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
சிம்ம ராசி அன்பர்களே:காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.ற்றார் உறவினர் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கன்னி ராசி காரர்களே: உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு ஏற்படும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு பகல் 03.07 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.உறவினர் நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தன்னம்பிக்கை குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பகல் 03.07 மணிக்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிரிகளால் இடையூறுகள் ஏற்படக்கூடும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரும்.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:எமனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள்.திரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:பழைய சிக்கலில் ஒன்று தீரும்.பிள்ளை களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.எதிர்பாராத பணவரவு உண்டு. கல்லூரிக்கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தன்னம்பிக்கை குறையும்.
கும்ப ராசி உறவுகளே:அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைகளை கண்டு தளரமாட்டீர்கள்.
மீன ராசி நேயர்களே:
பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.