பலமுறை முயற்சித்தும் தோற்றுப்போன ஐஸ்வர்யா. அடுத்த திட்டம் ரெடி. மக்களே இம்முறை உஷார் பிலீஸ்..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவ்வார நோமினேஷன் தான் மிக கடினமான ஒன்றாக இருந்தது. அதாவது கலந்து பேசி 2 வரை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் குரல் கூறி இருந்தது. ஆனால் நீண்ட நேரம் விவாவதம் நடந்ததால் மூவரை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
யாஷிகா மும்தாஜ் தவிர மற்றையவர்கள் ஐஸ்வர்யா இவ்வாரம் நாமினேஷன் வர வேண்டும் என கூறப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா என்னால் முடியாது நான் பைனல் செல்ல என்ன வேண்டுமானாலும் செய்வேன் அதனால் நான் போக மாட்டேன் என்று கூறினார்.
ஆனால் மற்றைய போட்டியாளர்கள் விடவில்லை.உள்ளே இருக்கும் போட்டியாளர்களால் கணித்திருக்க முடியும் இம்முறை சரியான முறையில் வெளியேற்றம் நடக்கவில்லை என்று அதனால் மீண்டும் ஐஸ்வர்யாவை எவிக்சன் கொண்டுவந்தார்கள். அத்துடன் மும்தாஜ், விஜயலட்சுமி, என மற்றைய இருவரும் தேர்வானார்கள்.
கடந்த வாரம் மும்தாஜ் டாஸ்க் செய்யாததால் ரித்விகா நேரடி நாமினேஷனில் இருகின்றார். அதனால் இவ்வாரம் மக்களிடம் செல்பவர்கள் ரித்விகா, மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, மக்களே ஏதோ ஐஸ்வர்யா வை மட்டும் கொஞ்சம் பார்த்து செய்யுங்கள்.
இம்முறை அவரது வாக்குகள் அடி மட்டத்தில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பிக் பாஸ் வீட்டில் அவரது அராஜகம் அதிகரித்துவிடும். ஐஸ்வர்யாவிற்கு அவரது மாநிலத்தில் உள்ளவர்களின் வாக்குகள் வருகின்றது அதனால் தான் கொஞ்ச வாக்குகள் சரி இருக்கின்றது. நாமும் ஏதாவது முயற்சித்தால் மட்டுமே முடியும்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”