மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு.! கதாநாயகியாக யார்.?
ஆஜானுபாக உடலும் குழந்தை முகமும் கொண்ட யோகி பாபு தான் இன்று முன்னணி காமெடி நடிகராக இருக்கின்றார். இவரது நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தொடர்ந்து விஸ்வாசம், சர்கார் என பத்துக்கு மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கின்றார்.
மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. வடிவேலு, சந்தானம் ஆகியோரின் பாதையில் யோகி பாபுவுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.ஏற்கனவே டார்லிங் என்ற படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்த இயக்குநர் இந்தக் கதாபாத்திரத்துக்கு யோகி பாபு தான் பொருத்தமாக இருப்பார் என அவரிடம் கதையை கூறியுள்ளார்.
கதை பிடித்துபோக அவர் உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார்.
இந்தப் படத்தில் யோகி பாபு ஓரு தனியார் பாதுகாப்பு அதிகாரி பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஒரு கும்பலிடம் இருந்து பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் அவரோடு ஒரு நாயும் நடிக்க உள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”