யார் இந்த ஐஸ்வர்யா? அம்பலமாகும் குற்றங்களின் பின்னணி.!
பிக் பாஸ் வீட்டில் ரித்விகா வெற்றியாளர் ஆகிவிட்டார். இந்த நிலையில் ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பெற்றார். சரி யார் இந்த ஐஸ்வர்யா ? மக்களால் தேடப்பட்டு வந்த கிரிமினல். ஆம் 2016ம் ஆண்டு ஆண்டு மக்கள் பணத்தை கொள்ளை அடித்த கோபி கிருஷ்ணன் என்பவரின் தொழில் பார்ட்னர் இவர் தான்.
2016ம் ஆண்டு 1லட்சம் பணத்தினை தங்களிடம் வைப்பீடு செய்தால் 10 லட்சம் வரை வட்டியுடன் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என கூறி மக்களை ஏமாற்றியவர் தான் இந்த கோபி கிருஷ்ணன். இந்த மோசடியில் கோடிக்கணக்கான பணத்தை கோபி. கொள்ளையிட்டு இருந்தார்.
இதை கண்டுபிடித்த மக்கள் பணத்தை மீண்டும் கேட்ட போது தப்பிச் செல்ல முயன்ற வேளை பொலீஸாரால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாத சிறை வாழ்க்கையின் பின் மக்கள் பணத்தை கொடுப்பதாக வெளியே வந்து ஒரு சிலரின் பணமும் திருப்பி கொடுத்தான். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்மந்தப்பட்டிருந்தனர், ஒருவர் நளினி,இன்னொருவர் ஐஸ்வர்யா.
இவர்களையும் மக்கள் தேடி வந்தனர்.ஆனால் யாரென தெரியாது மறந்து போயினர். பிக் பாஸ் வீட்டிற்கு கோபியால் வந்த ஐஸ்வர்யா யாருடைய நம்பர் நினைவில் இருக்கிறது என பிக் பாஸினால் கேட்கப்பட்ட போது கோபி நம்பர் என கொடுத்து இருந்தார். அப்போது பிக் பாஸிற்கு கூட யார் அந்த கோபி என தெரியவில்லை.
அவருடன் பேசிய ஐஸ்வர்யா, அம்மா நளினி எல்லாம் நலமா என கேட்டுள்ளார். இதனை அவதானித்த சிலர் தேடிப்பார்த்த போது தான் இந்த விடயங்கள் மீண்டும் வெளிவந்துள்ளது.அது மட்டும் இன்றி அவரது கையில் ஏற்கனவே கோபி என பச்சையும் குத்தியுள்ளார்.
ஏற்கனவே வியாபாரம் செய்து நஷ்டம் அடைந்ததாக குறிப்பிட்டு இருந்தார் ஆனால் மக்களை கொள்ளையிட்டதை சொல்லவில்லையே ஐஸ்வர்யா. தற்போது ஐஸ்வர்யா பற்றிய அத்தனை விடயங்களும் அம்பலம் ஆகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் ஆகினால் இன்னும் மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்திருக்கலாம்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”