உங்கள் கோடீஸ்வரர் கனவை நிஜமாக்குவது இப்படித்தான்!
அனைவருக்குமே ஒரு கனவு இருக்கும். அதை அடைவதற்கான வழிகளைத் தெரியாமல் தேடிக்கொண்டிருப்பதிலேயே பாதிக் காலம் கழிந்துவிடுகின்டறது. மீதிக் காலத்தை ஏதோ வாழந்து கொள்வோம் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டு வாழத் தொடங்கி விடுகின்றோம்.
நம் முடைய கனவுகள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்றால் அதற்குத் தேவை பணம்! ஆனால் சிலருக்கு பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்ற கனவே பெருங்கனவாக இருக்கும். அப்படி கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற நினைப்பவர்கள்
செய்யவேண்டிய , பின்பற்ற வேண்டிய சில முறைகளை கொஞ்சம் படியுங்கள். படிப்பதோடு மட்டுமல்லாமல் பின்பற்றவும் செய்யுங்கள்.
போதும் என்ற மனநிலையைத் தவிர்க்கவும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மனம் என்ற ஒரு பழைய பழமொழி உண்டு. ஆனால் ஒரு கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் இவ்வளவும் போதும் என்ற மனநிலையைத்ததான் முதலில் உதறித் தள்ள வேண்டுமாம். அத்தோடு “எனக்கு இப்போதே வேண்டும்” என்ற பேராசையை உங்களால் எதிர்க்க முடிந்தால், பணச் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம்.
குறுகிய மனநிறைவு என்பது குறுகிய காலத்திற்கு விலைமதிப்பில்லாததாகத் தெரிந்தாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும். எனவே அதிகமாக மேலும் அதிகமாக சம்பாதியுங்கள். போதும் என்று நிறுத்தி விடாதீர்கள்.
பணத்தை பார்த்து செலவளியுங்கள்!
உங்கள் நீங்கள் பணத்தைச் செலவழிக்கும் போது சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறீர்களா? உங்கள் தேவைகளைத் தேவைக்கு முன்பே முன் வைக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தேவையான நேரத்தில் செலவளிப்பது என்பது அவரவர் முடிவே. ஆனால் அந்தச் செலவு ஆடம்பரத்திற்கானதோ பகட்டுக்கானதோ என்றால் நீங்கள் உங்கள் கோடீஸ்வரர் கனவைத் துறந்து விடுங்கள். உண்மையில் பணக்காரர்கள் தங்களைப் பணத்தை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதை தேவையில்லாமல் ஆடம்பரச் செலவு செய்வதையும் செய்வதையும் விரும்ப மாட்டார்கள்.
எளிமையாக வாழுங்கள்!
பெரும் பணக்காரர்கள் பலரையும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எப்போதும் எளிமையான வாழ்க்கையையே வாழ்வார்கள். எளிய உடைகளை உடுத்தும் நம் பேஸ்புக் முதலாளி மார்க் சக்கர்பெர்க் முதல் நடுத்தரமான வீட்டில் வசிக்கும் வாரன் பப்பெட் வரை, சில செல்வச்செழிப்பானவர்கள் எளிமையான வாழ்க்கையையே வாழ்கின்றனர். செலவழிக்கும் முறை என்பது, நமது நிதிநிலை மற்றும் சொத்துக்கள் மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவையில்லா செலவுகளைத் தவிர்தல், தினமும் வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், சாதாரண வீட்டில் வசிப்பது போன்றவை அதிகம் பணம் சேமிக்க வழிவகுக்கும்.
திட்டமிட்டு பணத்தைச் செலவளியுங்கள்!
உங்கள் பணத்தை திட்டமிட்டு செலவளிக்கின்றீர்களா? இல்லை கணக்கு வழக்கின்றி செலவு செய்கின்றீர்களா? இரண்டாவது முறையைப் பின்பற்றுபவர் என்றால் நிச்சயம் உங்களுக்கு வெற்றிதான். உண்மையில் பணத்தைச் சேமிக்கும் மற்றும் செலவழிக்கும் வழிகளை நிதி திட்டமிடல் கூறுமா?
உண்மையில் உங்களின் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்து செலவளிக்கும் சரியான திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் பணக்காரர் ஆவதற்கான உங்கள் பாதையானது தொடங்குகிறது. நல்ல பொருளாதாரத் திட்டத்திற்கான முதல் அடி சிறந்த நிதி திட்டமிடல் தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதாமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்ய வைத்து அதிகமாகச் சேமிக்க வழிவகுக்கும். உங்களின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நிதி திட்டமிடலில் வராத தேவையில்லா செலவுகளைக் குறைப்பது எளிதாக இருக்கும்.
பணம் இருக்கும்போது முதலீடு செய்யுங்கள்!
முதலீடு என்பது பணக்காரர் ஆவதற்கான சிறந்த பண்பு ஆகும். பணம் கடைக்கும்போது அவற்றை சிறயி லாபம் ஈட்டக்கூடிய வகையில் முதலீடு செய்யுங்கள். பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறன் என்பார்கள். உண்மைதான். ஆனால் செல்வ செழிப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஏன் பெரும்பாலும் முதலீட்டாளர்களாக இல்லாமல் இருக்கிறீர்கள் என்பது தான் கேள்வி.
முதலீடு செய்வதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் என்றே நம்மில் பலர் நாம் நினைப்போம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கிணங்க சிறுதுளிகள் ஒன்று சேர்ந்தால் தான் கடல் உருவாகும் என்பது போல, முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில்(Systematic Investment Plans -SIPS) முதலீடு செய்யும் சிறிய அளவிலான பணம் மற்றும் சரியான சொத்து முதலீடு போன்றவை விரைவில் உங்களைக் கோடீஸ்வரராக மாற்றும்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”