பிக் பாஸ் போட்டியாளர்கள் அக்ஷரா மற்றும் நதியா மோதல், ஆரம்பமான மற்றுமொரு சண்டை ! இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது தான் நடக்கும்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 7 நாட்கள் ஆன நிலையில் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். திருநங்கையான நமீதா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நேற்றைய தினம் கமலஹாசன் அவர்களுக்கு பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை,
ஏனெனில் வீட்டிற்குள் பெருதாக கண்டெண்ட் ஒன்றும் இல்லை, அதனால் இன்றைய நாளை கொஞ்சம் சுவாரஸ்யமானதாக மாற்ற சில விடயங்கள் செய்யப் பட்டுள்ளது, அதில் அண்ணாச்சி மற்றும் அபிஷேக் போட்டியாளர்கள் பற்றி பேசுகின்றனர். இதன் போது வழமை போல் அபிஷேக் சிவாஜி கணேசன் லெவலுக்கு நடித்து அழுகிறார்.
பின்னர் ஒவ்வொரு போட்டியாளருக்கும் லைக் அன்லைக் கொடுக்க சொல்கிறார். அடுத்து குக்கிங் டீம் பற்றி பேசப் படுகின்றது, குக்கிங் டீம் பிரியங்கா பார்த்துக் கொண்டதால் அதில் உள்ள குறைகள் பேசப் படுகின்றது. இது வரை யார் என்றே தெரியாமல் வீட்டின் ஒரு மூலையில் இருந்த நதியா சங் இன்று வெளியே காட்டப் படுகின்றார்.
அதுவும் அக்ஷராவுடன் வாய் தர்க்கம் ஏற்படுகின்றது. இந்த சண்டை எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இந்த வாரம் கமலஹாசன் அவர்களுக்கு தாளிக்க எதுவும் இல்லை, என்பதால் ஞாயிறு எபிசோட் தேவையில்லாத ஆணியாகி போகிறது.
இன்று நதியா ரசிகர்கள் மற்றும் அக்ஷரா ரசிகர்கள் பார்க்கலாம் இவர்களில் வாய் தர்க்கம் மட்டுமே இன்று ஹைலைட். இன்றும் நமீதா மாரிமுத்துவிற்கு என்னாது என்று இன்றும் கமலஹாசன் சொல்லவில்லை, பொறுத்திருந்து பார்ப்போம்..!