“அறிகுறிகள் தென்படும் போதே கொரோனா பரிசோதனை செய்யுங்கள்,இல்லாவிட்டால் உயிர் போய்விடும்” கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ள நடிகை வேண்டுகோள்.! நலம்பெற பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்.!!
உலகம் முழுவதும் கட்டுப் படுத்த முடியாமல் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை மிகவும் பாதித்து வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப் படுவதாக இந்திய சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் மரண எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் தற்போது மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப் படுத்த அரசு முழு முயற்சியை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரஸை அழிக்கும் ஆயுதம் மக்களிடம் மட்டுமே இருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருந்தால் நிச்சயம் கொரோனா வைரஸை கட்டுப் படுத்த முடியும் என இந்திய வைத்தியர்கள் கூறிவருகின்றனர். கொரோனா அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம் தான்.
அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட நடிகை அம்மு அபிராமி கூறுகையில் சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. சாதாரண காய்ச்சல் போல் இல்லாமல் உடல் வலி, தலை வலி, என இருந்தது. தாமதிக்காமல் உடனடியாக சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தேன், கொரோனா பாஸ்டிவ் என வந்தது.
அத்துடன் வந்த உடன் பரிசோதனை செய்துகொண்டதால் நார்மலாகவே இருப்பதாக டாக்டர்கள் கூறியதுடன் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம் என கூறினார்கள். என்னை தனிமை படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். தற்போது உடல் வலி குறைந்துள்ளது, நான் குணமாகி வருகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கள் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப் பட்டார்.
அவரை பரிசோதனை செய்யும் படி பலமுறை சொன்னோம், கேட்கவே இல்லை, சாதாரண காய்ச்சல் என வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரைகளை போட்டார். நோய் அதிகரித்ததன் பின்னர் பரிசோதனை செய்த போது ஆபத்தான நிலை என டாக்டர்கள் கூறினார்கள். சில நாட்களின் பின்னர் இறந்துவிட்டார். ஆரம்ப அறிகுறி தெரியும் போதே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் நலமுடன் இருக்கலாம். கவனமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார். அம்மு அபிராமி ராட்சசன் மற்றும் அசுரன் திரைப்படத்தில் நடித்த நடிகையாகும்.!