இன்றளவில் குப்பைத் தொட்டிகளிலும் , டாய்லெட்களிலும், கோயில்கள், அநாதை இல்லங்கள், வீதியோரங்கள், போன்றவற்றில் குழந்தைகளை தூக்கி போட்டுவிட்டுச் செல்லும் கொடூரங்கள் அதிகரித்து விட்டது. காதல் என்ற பெயரில் சிலரது காம பசிக்கு பெண்கள் பலியாகிவிட ஏதும் அறியாத உயிர்கள் உருவாகி விடுகிறது.
ஒரு சிலர் கருவிலேயே கலைத்துவிடுகின்றனர் ஒரு சிலர் பிறந்த பின் கொன்று விடுகின்றனர், சிலர் துடிக்க துடிக்க போட்டுவிட்டு ஓடிவிடுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இன்னுமொரு பக்கம் முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தாலும் குழந்தை வரம் இன்றி துடித்து வருகின்றனர்,
ஏராளமான மருத்துவ முறைகள் இருந்தாலும் எதனாலும் சரி செய்ய முடியாத பலர் இருந்து வருகின்றார். இன்று நாம் பார்க்கப் போகும் குறும்படம் இதனை தான் தெளிவாக காட்டுகிறது. இதில் நடித்திருப்பவர்கள் அத்தனை அழகாக இதில் நடித்துள்ளனர், இரண்டு விதமான பெண்களின் வாழ்க்கையை சிறப்பாக படமாக்கியுள்ள குறும்பட குழுவினருக்கு நன்றி…!!