பிக் பாஸ் லொஸ்லியாவிற்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்..! சம்மதிப்பாரா லொஸ்லியாவின் அப்பா மரியநேசன்..
இலங்கையில் பிரபல தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா இந்தியா வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இலங்கை மட்டும் இன்றி தமிழ் நாட்டு இளைஞர்களும் லொஸ்லியாவிற்கு ஆர்மி ஆரம்பித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.
ஆனால் கவினுடன் ஏற்பட்ட காதலால் அனைத்தையும் மறந்து காதலில் உருகிக் கொண்டிருந்தார். ஆனால் லொஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் வந்து இந்த காதலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததற்கு லொஸ்லியாவிற்கு அதற்கான பயன் வெளியே ஆரம்பமாக தொடங்கியுள்ளது.
ஆம் சேரனின் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரப் போகும் லொஸ்லியாவிற்கு ராஜா ராணி 2 சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு உறுதி படுத்தப் பட்டுள்ளதாக அதன் இயக்குனர் பிரவீன் தெரிவித்தார்,
இதனை தொடர்ந்து நடிகர் அருள் நிதியுடன் ஜோடியாக நடிக்க லொஸ்லியாவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. இத்தனை வாய்ப்புகள் லொஸ்லியாவிற்கு வந்தாலும் இதற்கு அவரது தந்தை மரியநேசன் சம்மதிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்..!