பிக் பாஸ் வீட்டில் இன்று ரகசிய அறை இல்லை, சற்றுமுன் பிக் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்ட போட்டியாளர் இவர் தான்..!!
பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது, இன்றைய மற்றும் நாளைய ஷூட்டிங் இரண்டும் சற்று முன்னர் நிறைவடைந்தது. இதன் படி இன்றைய நிகழ்ச்சியில் அனிதா மற்றும் ஆரியின் சண்டை பற்றி முதலில் கமலஹாசன் பேசுகிறார், பின்பு டாஸ்க் நிறைவடைந்த பின்னர் நடந்த வரிசை படுத்தல் பற்றியும், பேசுகிறார், கிறிஸ்மஸ் பற்றி பேசும் கமலஹாசன், பாலாவின் கேப்டன் சி எப்படி இருந்தது என்று கேட்கிறார், அதன் பின் வழமை போல் பேசியே கொல்கிறார். அடுத்ததாக ஆரி முதலாவதாக காப்பாற்றப் படுகிறார் என அறிவிக்கிறார்.
நாளைய நிகழ்ச்சியியிலும் வழமை போல பேசியே கழுத்தறுக்கும் கமலஹாசன் செய்யும் ஒரே நல்ல செயல் அனிதாவை வெளியேற்றுவது தான். அனிதா அழகான தமிழ் பெண் தான், பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அனிதாவை போல் யாரும் தமிழ் பேச மாட்டார்கள்,
ஆனால் பிடிவாதம், ஆரியை போல் தான் நினைப்பது மட்டுமே சரி என்று வாதாடும் குணம், அடுத்தவர் செய்ய கூடாது ஆனால் அவர் செய்யலாம், இப்படி அவர் செய்யும் சின்ன சின்ன விடயங்களே ரசிகர்களை கடுப்பாக்கியது,
இதனால் இந்த வாரம் மிகக் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுகிறார். இதற்கான சூட்டிங் முடிந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார், இன்று ரகசிய அறை இல்லை. எப்படியோ இந்த வாரமும் ஆஜித் தப்பிவிட்டார்.!!;