சுச்சி லீக்ஸ் போல் இனி அனிதா சம்பத் லீக்ஸ் வரும் போல் உள்ளது, இயக்குனர் ரவீந்தர்! முடிவுக்கு வராத பிக் பாஸ் சண்டை!
“சுசி லீக்ஸ் அல்ல இனி அனிதா லீக்ஸ்” தான் என இயக்குனர் ரவீந்திரன் கூறியிருப்பது அனிதா சம்பத் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் கடந்த வருடம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 85 நாளில் வீட்டை விட்டு வெளியேறினார். ஆரம்பத்தில் அனிதாவை ரசிகர்களுக்கு பிடித்திருந்த போதும் தனக்கு பேச இடம் தரவில்லை என கத்திக் கொண்டிருந்ததுடன் இறுதியில் ஆரியுடன் சண்டை போட்டார்.
இதனால் ஒட்டிமொத்த ரசிகர்கள் அனிதாவை வெறுத்ததுடன் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். அனிதா வெளியே வந்து அடுத்த நாளே அவரது தந்தை இறந்ததால் அவரை கலாய்ப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். அதன் பின் ஆரிக்கு ஆதரவு வழங்கிய அனிதா வெற்றிக் கோப்பையுடன் வெளியே வாருங்கள் என வாழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டிலை ஆரி பணம் கொடுத்து வாங்கியதாக அனிதா சொன்னதாக இயக்குனர் ரவீந்திரன் பிரச்சனையை ஆரம்பித்தார். அது சம்மந்தமான குரல்களையும் வெளியிட்டார். இதனை பார்த்த அனிதா அதிர்ந்து போனதுடன் இப்படி நான் சொல்லவே இல்லை என பதிவுகள் வெளியிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள அனிதா நான் ஆரிக்கு எதிரி இல்லை, சிறு சண்டை வந்தது அதன் பின் நாங்கள் சேர்ந்துகொண்டோம், வெற்றிக்கோப்பையுடன் வாங்க அண்ணா என நான் தான் ஆரிக்கு கூறிவிட்டு வந்தேன். பிக் பாஸ் டைட்டில் வெற்றியானது ஆரியின் திறமைக்கும், நல்ல மனதிற்கும் கிடைத்த வெற்றியாகும். நான் ஆரி பற்றி நல்லவற்றை மட்டுமே பேசுவேன், பேசினேன்.
இயக்குனர் ரவீந்தருக்கு என் மீது ஏதோ கோபம் உள்ளது அது தான் இப்படி செய்கிறார். நான் ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்ல அதனை ஒன்றாக்கி இப்படி செய்திருக்கிறார்கள், என அனிதா கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ரவீந்தர் இனி சுசி லீக்ஸ் போல் அனிதா லீக்ஸ் வெளியாகும் போல் உள்ளது என ரவீர்ந்தர் தெரிவித்துள்ளார். பொறுத்து இருந்து பார்ப்போம்.!