“தாலி எனக்கு தேவையில்லை” தாலியை கழட்டி வைத்து விட்டு அனிதா கூறிய பதில்.! திட்டி தீர்க்கும் நெட்டிஷன்கள்.!!
செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சிக்கு அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். கட்டினால் இப்படி ஒரு பெண்ணை கட்டனும் என அனிதாவிற்காக அன்றைய நாட்கள் ஏராளமான மீஸ்கள் வெளியானது. ஆனால் அதனை அப்படியே மாற்றியது பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனிதா நடந்துகொண்டதை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பெண்ணை கட்டுவதற்கு நான் பிரம்மச்சாரியாக இருந்து விடுகிறேன் என்றார்கள்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அனிதா யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். தற்போது யூடியூப்பில் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றார். ஆனால் வீடியோக்கள் சிலவற்றில் பொட்டு தாலி எதுவும் அணிவதில்லை. அதனை பார்த்த ரசிகர்கள் பொட்டு வைக்கலாமே, பொட்டு வைத்தால் அழகாக இருப்பீர்கள் என கூறினார்கள், அத்துடன் தாலி கட்டிய பின் தாலியை கழட்டி வைப்பது முறையல்ல, தாலியை போடுங்கள் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த அனிதா என் புருஷன் என்னிடம் இருக்கும் போது நான் ஏன் தாலி அணிய வேண்டும். தாலி பெண்ணுக்கு வேலி என்றார்கள் அப்படியானால் வேலியாக என் கணவர் இருக்கிறார். தாலியை அணிந்து எந்த மதம் சாதி என்று காட்ட விரும்பவில்லை. அதே போல் தான் பொட்டும்.
எனக்கு பொட்டு வைத்து என் மதத்தை பிரித்து பார்க்க விருப்பம் இல்லை , அதனால் பொட்டு வைக்கப் பிடிக்கவில்லை, அழகுக்கு வைக்க நினைத்தால் வைப்பேன் என கூறியுள்ளார்.!!