அப்பாவின் மரணம் எப்படி நடந்தது.? அனிதா வீட்டிற்கு சென்றதும் அப்பாவை பார்த்தரா? தந்தையின் மரணம் பற்றி அனிதா போட்ட உருக்கமான பதிவு..!!
அனிதாவின் தந்தை ஆர்.சி சம்பத் அவர்கள் சீரடியில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த போது ரயிலில் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன தான் அனிதாவை திட்டி தீர்த்தாலும் அனிதாவின் தந்தையின் மரணம் என்பது அவரது எதிரிகளால் கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. இந்த நிலையில் தந்தையின் மரணம் பற்றி அனிதா பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் எனது தந்தையின் மரணம் என்பது என்னால்.ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தந்தையிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றேன், அது தான் நான் அவரை இறுதியாக பார்த்தது, அதன் பின் தனிமை படுத்தல் பிக் பாஸ் என 100 நாட்கள் கடந்து விட்டது.
நான் வீட்டிற்கு வரும் போது அப்பா வீட்டில் இல்லை, சீரடி சென்றதாக கூறினார்கள், அப்பாவிற்கு பலமுறை கால் செய்தேன் போன் off. அங்கு டவர் கிடைக்கவில்லை. அதன் பின் அப்பா வரும் வரை காத்திருந்தேன். இன்று ரயிலில் வருவதாக தம்பி கால் செய்து சொன்னான்..அப்பா வருவார் என்றே காத்திருந்தேன், 8 மணிக்கு அவர் உயிருடன் இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.
யாராவது இது பொய் என்று சொல்ல மாட்டார்களா என்று நினைக்கிறேன். அப்பாவிற்கு இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் கடந்த வாரமே வந்திருக்கலாமே என்று தோன்றுகிறது. என் அப்பாவுடன் இறுதியாக பேசவில்லை, அவரை உயிருடன் பார்க்க கூட இல்லை, என்னால் தாங்க முடியவில்லை.
இந்த வாரம் நான் வெளியேற்றப் பட்டது கடவுளின் கட்டளை போல் உள்ளது. அப்பாவின் முகத்தை சரி இறுதியாக பார்த்துவிடுவேன், என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த பலரும் அனிதா தைரியமாக இருங்கள் என கூறி வருகின்றனர்.!