பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்ச்சனா போட்ட முதல் பதிவு.! என்ன கூறி இருக்கார் பாருங்கள்.!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று தொகுப்பாளினி அர்ச்சனா வெளியேற்றப் பட்டார். அர்ச்சனாவில் வெளியேற்றம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்தது. அர்ச்சனா வீட்டிற்குள் சென்றதில் இருந்து நிஷா, ரியோ, சோம், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் விளையாடவே இல்லை.
அன்பு அன்பு என ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாட அர்ச்சனா விடவில்லை, அத்துடன் அர்ச்சனா தோற்றாலும் தன் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் இவரை வெளியேற்ற முயன்று ரசிகர்கள் தோற்றுப் போனார்கள்.
இம்முறை மிகக் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததால் வெளியேற்றப் பட்டார். இந்த நிலையில் வெளியே சென்ற அர்ச்சனா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அர்ச்சனா தனது முதலாவது பதிவை ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டதுடன் சித்துவின் மரணம் பற்றி பதிவிட்டுள்ளார். மிகவும் அன்பானவள், பல வருடங்கள் ஒன்றாக பணி புரிந்தோம், அவளது பிரிவு மிகப் பெரிய இழப்பு.
அவளது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுங்கள் என தெரிவித்ததுடன் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். அர்ச்சனாவின் மகள் வெளியிட்டுள்ள பதிவில் என் Bosy வந்துவிட்டார். எனக்கு மிகவும் பிடித்தது “கடவுள் இருக்கான் குமாரு” இது தான். என் bosy என்னுடன் இருக்கிறார், நன்றி என தெரிவித்துள்ளார்..!
#Archana with Zaara#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/oHY7Th9dOS
— Imadh (@MSimath) December 20, 2020