வைல்ட் கார்ட் வரவாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அர்ச்சனா..! முதல் நாளிலேயே வீட்டிற்குள் ரணகளம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி 16 பேருடன் ஆரம்பித்து தற்போது 17 பேராக மாறியுள்ளது. இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல தொலைகாட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக 50 நாட்களில் தான் வைல்ட் கார்ட் வரவு இருக்கும்,
ஆனால் இம்முறை ஒருவர் கூட வெளியேறாத நிலையில் ஆரம்பத்திலேயே இன்று அர்ச்சனா வீட்டிற்குள் வந்துவிட்டார். வீட்டில் இருக்கும் மற்றையவர்களை விட அர்ச்சனாவிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பது சுரேஷ் அவர்களுக்கு தெரியும், அர்ச்சனா வந்ததுமே நீங்கள் தான் வருவீர்கள் என்று நினைத்தேன் என கூறினார்.
அர்ச்சனாவிடம் சனம் வீட்டில் உள்ள எல்லோரும் எப்படி என்ற கேள்விக்கு இப்ப தானே வந்து இருக்கேன் இனி தெரியும் என்று ஒரு போடு போட்டு விடுகிறார். இது போக Unseen காட்சிகள் வெளியாகி உள்ளது, அதில் அதில் அர்ச்சனாவின் முதல் டார்கெட் சுரேஷ் மற்றும் சனமாக இருக்கிறது.
அர்ச்சனாவின் வரவு நிஷாவிற்கும் ரியோவிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட வாய்புகள் உள்ளது. வந்த முதல் நாளே சனத்தின் மீது அர்ச்சனாவின் பார்வை உள்ளதால் முதல் நாளிலேயே ரணகளம் செய்ய ஆரம்பித்து விட்டார். பொறுத்திருந்து பார்ப்போம்..!!