இன்றைய ராசி பலன் – 15.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 15-10-2020, புரட்டாசி 29, வியாழக்கிழமை, திரியோதசி திதி காலை 08.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.53 வரை பின்பு அமாவாசை. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.58 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் மாலை 05.58 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். வெளியிலிருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
மிதுன ராசி காரர்களே:குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
கடக ராசி நேயர்களே:சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் தற்போது கைக்கு வந்து சேரும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும்.உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி ராசி காரர்களே:குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உறவினர்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். சின்ன சின்ன வேலை களையும் அலைந்து, திரிந்து முடிக்க வேண்டிவரும்.சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.
துலாராசி உறவுகளே:தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.கடன் பிரச்சினைகள் குறையும்.
தனுசு ராசி அன்பர்களே:உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். அவர்களுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் அவசியம். வாழ்க்கைத்துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். சவாலாக தெரிந்த சில வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மூன்றாவது நபர் களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.அரசால் அனுகூலம் உண்டு. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணை யின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும்.