எவ்வளவோ போராடினேன் நச்சு இடம் இருந்து உன்னை காப்பாற்ற முடியவில்லை. மனைவியின் இறப்பின் பின் அருண்ராஜா போட்ட பதிவு!
நச்சுக்கு நல்லவர்கள் கெட்டவர்கள், தேவையானவர்கள், உயிர் மூச்சுக்கள் எதுவும் தெரியாது, நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் என்னைப் போல் தனியாகி விடுவீர்கள் என அருண் ராஜா காமராஜா கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமைகளுக்கு சொந்தக் காரரான அருண் ராஜா கொரோனாவால் பாதிக்கப் பட்டார். இவருடன் இருந்ததால் இவரது மனைவியும், ஆடை வடிவமைப்பாளரான சிந்துஜாவிற்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டது.
இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருண் ராஜாவின் அனைத்துமாய் இருந்தவர் சிந்துஜா இவரது மரணம் அருண் ராஜா காமராஜாவை சோகத்தில் ஆழ்த்திய நிலையில் மனைவியின் மரணம் பற்றி உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். இதோ குறித்த பதிவு.!