நடிகைக்கு நாற்காலியாக விரும்பிய இளைஞர். நடிகையின் செயலால் குவியும் வாழ்த்துக்கள்!
நடிகை ஒருவரிடம் இளைஞர் ஒருவர் சொன்ன ஆசை பலரது கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ள நிலையில் குறித்த நடிகை அறிவுரை சொன்ன விடயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான காவியத் தலைவன் திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனைகா சோதி.
அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு சமூக வலைத்ததளங்களில் பிஸியாக இருக்கும் அனைகா அண்மையில் ரசிகர்களிடம் உங்கள் ஆசைகளை நீங்கள் யாராக வரவேண்டும் என்பதை கூறுங்கள் என கேட்டிருந்தார். அதற்கு பலரும் பல விடயங்களை பகிர்ந்த நிலையில் ரசிகர் ஒருவர் பெரிய ஆசைகள் எல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி (Chair) ஆனால் போதும் என கூறியுள்ளார்.
பதில் அளித்துள்ள அனைகா சிறு வயதில் இருந்து உங்களை வளர்த்து லட்சக்கணக்கான பணத்தை கொடுத்து உங்கள் பெற்றோர் உங்களை படிக்க வைக்க நீங்கள் வெறும் 200 ரூபா நாட்காலியாக விரும்புகிறீர்கள். உங்கள் மனதை தொட்டுச் சொல்லுங்கள் இது சரி தானா? கண்டிப்பாக இதில் துளியும் மகிழ்ச்சி இல்லை என தெரிவித்துள்ளார் !