சினிமாவை விட்டு விலகும் நடிகை சமந்தா.! சமந்தாவின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் குழந்தை தானா.? ஷாக்கில் ரசிகர்கள்.!!
நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா பிரிய போவதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து இருவரும் மறுக்கவில்லை, அதனால் இருவரும் பிரிந்துவிட்டதாகவே நம்பினார்கள்.
ஆனால் திடீரென இருவரும் இணைந்து கோவா கடற்கரை பகுதியில் இடம் வாங்கினார்கள். இருவரும் பிரிய மாட்டார்கள் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் தற்போது சமந்தா சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமந்தா கொடுத்துள்ள பேட்டியில் தற்போது எடுத்த திரைப்படங்கள் நடித்து முடித்து விட்டேன்,
சில வருடங்கள் ஓய்வு தேவையாக இருக்கிறது அதனால் சினிமாவை விட்டு விலகுகிறேன் என அறிவித்துள்ளார். இந்த விடயத்திற்கு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் சமந்தாவின் கணவரின் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் சமந்தா திரையுலகை விட்டு விலகுவதாகவும், கண்டிப்பாக அடுத்த வருடம் சமந்தாவின் குழந்தையை நாம் பார்க்கலாம், குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவே சினிமாவில் இருந்து விலகம் முடிவை சமந்தா எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.!