இன்றைய ராசி பலன் – 30.11.2021
இன்றைய பஞ்சாங்கம், 30-11-2021, கார்த்திகை 14, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.14 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 08.34 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. தனியநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே: நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.. உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
மிதுன ராசி காரர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
கடக ராசி நேயர்களே: சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும்.குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். டுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். வீண் செலவுகளை தவிர்த்து சற்று சிக்கனமாக இருப்பது நல்லது.
துலாராசி உறவுகளே:உடல் அசதி சோர்வு வந்து விலகும்.குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும்.கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பெரிய மனிதர்களின் ஆதரவால் நன்மை கிடைக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவர வுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் தாங்கும் மனோ பலம் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. எளிதில் முடிய வேண்டிய காரியத்தை கூட சிரமபட்டு முடிக்க நேரிடும்.தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் இன்று வழக்கமான செயல்களிலும் பொறுமை அவசியம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.யாரோடும் தேவையில்லாமல் விவாதம் செய்ய வேண்டாம்.வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் வகையில் செலவுகளும் வருத்தமும் ஏற்படலாம்
மீன ராசி நேயர்களே
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும்.சகோதரர்களால் பயனடைவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வேலை விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.