யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்த சபானா ஆர்யன் நிச்சயதார்த்தம்.! வைரலாகும் புகைப்படம் இதோ.!!
தற்போது அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி வருபவர் “செம்பருத்தி” சீரியல் ஹீரோயின் பார்வதி என்கிற சபானா தான். ஆரம்பத்தில் சீரியலில் பார்வதியின் காதல் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் தற்போது பார்வதியின் நிஜ காதல் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் மூத்த மகனாக நடிக்கும் ஆரியனை பார்வதி காதலித்து வருவது அனைவரும் அறிந்தது, அண்மையில் இருவரும் இணைந்து புகைப்படங்கள் கூட வெளியிட்டு இருந்தனர். இவர்கள் இருவரின் ரசிகர்களும் எப்போது திருமணம் என கேட்டு வந்த போதும் பதில் சொல்லாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சபானாவிற்கும் ஆர்யனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியானது, இதனை இருவரும் மிக நாசுக்காக உறுதி படுத்தியுள்ளனர். அதாவது கையில் மருதாணி போட்ட நிலையில் நிச்சயதார்த்த மோதிரத்தையும் காட்டியுள்ளனர். ஆர்யனின் கையை பிடித்த படி சபானா பதிவிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.!