போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப் பட்டது சோனியா அகர்வால் இல்லை! இதோ இந்த நடிகை தான்.! வெளியான உண்மை.!!
தமிழ் திரைப்பட நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப் பட்டதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார். சுசாந்த் சிங் மரணத்தின் பின் நடத்தப் பட்ட விசாரணையில் பல போதைப் பொருள் கும்பல்கள் சிக்கினார்கள். அதில் முக்கியமாக ஹிந்தி மற்றும் கன்னட நடிகைகள் சிக்கினார்கள்.
அதில் தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையும் ஒருவர். இந்த நிலையில் போதை பொருள் வழக்கில் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் முன்னாள் மனைவியான நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப் பட்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால் கைது செய்யப் பட்டது தமிழ் நடிகை சோனியா இல்லை என்றும்,கன்னட நடிகை சோனியா அகர்வால் சென்றும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இது குறித்து சோனியா அகர்வால் கூறி இருப்பதாவது பேப்பரும் பேனாவும் இருந்தால் எல்லாம் எழுதி விடாதீர்கள், இனி இது போன்ற செய்திகள் வெளியானால் உங்கள் மீது வழக்கு தொடர்வேன்,என தெரிவித்துள்ளார். ஒரே பெயரில் இரண்டு நடிகைகள் இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.!!