என்னை அவமானப் படுத்திய ” இவர்களின் விருதுகளை இனிமேல் வாங்க மாட்டேன்” நடிகர் பார்த்தீபன் கோபத்தில் போட்ட பதிவு..! ஷாக்கில் ரசிகர்கள்..!!
விருதுகள் திறமைகளை ஊக்குவிக்கத் தான் என சிலரும் விருதுகள் தான் எமது படைப்புக்கான அங்கீரம் என பலரும் இருக்கின்றனர். ஆனால் விருது கிடைக்கவில்லை என்பதால் இனி அவர்கள் கொடுக்கும் எந்த விருதையும் வாங்க மாட்டேன் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்.2019 ம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் 60% சதவீத திரைப்படங்கள் சிறந்த திரைப்படங்களாக இருந்தது, விஸ்வாசம், பேட்டையில் ஆரம்பித்து பிகில் கைதி வரை ஒன்றுடன் ஒன்று சளைத்தது அல்ல என்பதை நிரூபித்தது.
அதிலும் தனுஷின் அசூரன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவு மக்கள் மனதை வென்றது, சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் கூட சாதனை படைத்தது. இந்த நிலையில் விருது வழங்கும் சேனல்கள், நிறுவனங்கள் சற்று தடுமாறி போனது. இதில் ஜீ தமிழ், விஜய், உட்பட ஏராளமான விருது விழாக்கள் நடந்து முடிந்த நிலையில் விகடன் விருது விழா இடம்பெற்றது.
இந்த விழாவிலும் அசூரன், விஸ்வாசம், கைதி, பிகில், போன்ற திரைப்படங்கள் விருதுகளை அள்ளியது. இந்த விழாவிற்கு சென்ற பார்த்தீபன் தனது ஒத்தை செருப்பு 7 திரைபடத்திற்கு விருது கிடைக்கவில்லை என்பதால் கடுப்பாகி உள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு , Eligible லிஸ்டில் இருப்பதாக பார்த்தீபன் கூறி இருந்த நிலையில் விகடன் விருது கொடுக்கவில்லை என்பதை கோபமாக பதிவிட்டுள்ளார்.
இரண்டு தேசிய விருதுகள், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை, ஆனால் விகடனில் விருது இல்லை, அதனால் இனிமேல் விகடன் விருதுகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இன்னும் தேசிய விருதுகள் அறிவிக்கப் படவில்லை, அப்படி இருக்கையில் எப்படி ஒத்தை செருப்புக்கு 2 தேசிய விருதுகள் என பலரும் பார்த்தீபனை கிண்டலடித்து வருகின்றனர்..!!
2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டே pic.twitter.com/pdhld19H0g
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 11, 2020