அப்பாவி இளம் பெண்ணுக்கு காரணமே இன்றி நண்பன் செய்த கொடூர செயல்..! கதறி துடிக்கும் பெற்றோர்..!!
இன்று கொலைகள் சாதாரண இடம்பெறும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது, ஒருவர் மீது கோபம் ஏற்பட்டால் கொலை செய்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது, அதனை அவர்கள் இலகுவாக செய்ய சரியான தண்டனை இல்லாததால் குற்றங்கள் அதிகரிக்கவும் ஆரம்பித்து விட்டது. இது போன்ற சாம்பவம் ஒன்று தெலுங்கானா வாரங்கலில் இடம்பெற்றுள்ளது.
முனிகலா ஹரதி என்ற 25 வயது பெண்ணும் முகமது ஷாஹித் என்ற 25 வயதான இளைஞனும் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி காலத்தில் இருவரும் நண்பர்கள் என்பதால் குடும்பத்தினர் சந்தேகப் படவில்லை, ஷாஹித் ஹரதியை அவர்கள் வீட்டிலேயே வந்து சந்திப்பது வழக்கம். இந்த நிலையில் இவர்கள் காதலிப்பது பற்றி எதுவும் தெரியாத பெற்றோர் ஹரதிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதனை ஷாஹித் திடம் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஹரதியிடம் தனியாக பேசப் வேண்டும் என கூறிய ஷாஹித் தான் தங்கி இருந்த தனி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஹரத்தியில் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நேரடியாக சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய சிறைச் சாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு உள்ளே செல்ல அனுமதிக்காத காவலரிடம் கொலை செய்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்த காவலர் அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து ஷாஹித்தை கைது செய்ததுடன் அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஹரதியின் சடலமும் மீட்கப் பட்டது. இது குறித்து ஷாஹித் கூறுகையில் ஹரதியின் பெற்றோர் பார்க்கும் இளைஞனுக்கு ஹரதி சம்மதம் சொல்லிவிட்டால் என்ற சந்தேகத்தில் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஹரதியின் பெற்றோர் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள், இவர்கள் காதலிப்பது எங்களுக்கு தெரியாது, இருவரும் சொல்லவும் இல்லை, எங்களுக்கு ஷாஹித்தை பிடிக்கும் சொல்லி இருந்தால் திருமணம் செய்து வைத்திருப்போம். அத்துடன் நாம் ஹரதிக்குதிருமணம் பேசுவது அவளுக்கு தெரியாது, அவள் சம்மதம் சொல்லவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.