தொங்கிய நிலையில் துடிதுடித்து மரணமடைவதை வீடியோவாக எடுத்த கணவர்.! வீடியோவை பார்த்து அதிர்ந்து போன பொலீஸார்.!!
மனைவி கண் முன் துடிதுடித்து மரணிப்பதை கணவர் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொண்டம்மா, 32 வயதாகும் இவருக்கு தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் மனைவி கொண்டம்மா மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனால் கணவன் மனைவியிடையே தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது, கணவரின் பொய்யான சந்தேகத்தை தாங்கிக் கொள்ள முடியாத கொண்டம்மா என்னை நீங்கள் நம்பவில்லை, நான் செத்தால் நம்புவீர்கள் தானே என் கூறி கணவரின் கண் முன்னால் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார்.
பின்னர் கயிறு கட்டி தூக்கு மாட்டியுள்ளார். மனைவி கயிறு கட்டுவது, தூக்கில் தொங்குவது தொடக்கம் அவர் துடிதுடித்து மரணிப்பது வரை கணவர் வீடியோ எடுத்துள்ளார். குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்து பார்த்த போது பிணமாக கொண்டம்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் கொண்டம்மாவின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் கணவரை விசாரித்த நிலையில் மனைவியின் மரணத்தை வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது, இதனை தொடர்ந்து கணவரை கைது செய்த பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.!!