கள்ளக் காதலால் பெற்ற குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த அபிராமியின் தம்பி தற்கொலை.! தம்பியின் மரணத்திற்கு காரணமான அபிராமி.!!
கடந்த 2018ம் ஆண்டு பிரியாணி காதலால் தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த அபிராமியின் தம்பி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில் இவரது மரணதிற்கு காரணம் பிரியாணி அபிராமி என்பது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் பிரசன்னா மணிகண்டன்.
அபிராமியின் தம்பியான இவர் கல்லூரியில் படிக்கும் போதே பெரம்பூரில் வசித்து வேலூரை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்ததுடன் திருமணத்திற்கு நாள் குறித்து திருமண ஏற்பாடுகளும் இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் பிரசன்னா பற்றி பெண் வீட்டார் விசாரித்த போது இவர் பிரியாணி அபிராமியின் தம்பி என்பது தெரிய வந்துள்ளது. இதனை மறைத்து திருமண ஏற்பாடு செய்ததால் கடுப்பான பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியதுடன் இப்படி ஒரு வீட்டில் பெண் கொடுக்க மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்து போன பிரசன்னா காதலியிடம் பேசிய போது அம்மா அப்பா சொல்வதில் தவறு இல்லை. உங்களுடன் எங்கும் என்னால் செல்ல முடியாதே, பிரியாணிக்காக கொலை செய்தவரின் தம்பி என்பார்களே, அதனால் இந்த காதல் இனி வேண்டாம் என கூறியுள்ளார் .
காதலித்தவர் இனி எப்போதும் கிடைக்க மாட்டார் என்பதை அறிந்த பிரசன்னா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த மரணம் தற்கொலை தான் என உறுதிப் படுத்தப் பட்ட நிலையில் பொலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.!!