பாலாஜியிடம் கேள்வி கேட்ட இலங்கை ரசிகர்.! பாலாஜியின் உண்மையான பதிலால் கண்ணீர் விட்ட நெகிழ்ச்சி சம்பவம்.!! இதோ…!!
பிக் பாஸ் வீட்டில் அதிகமானவர்களால் வெறுக்கப் பட்டாலும் ஆம்புள என்றால் இப்படி இருக்கனும் என இளைஞர் யுவதிகளால் கொண்டாடப் பட்டவர் பாலாஜி முருகதாஸ்..பிக் பாஸ் வீட்டிற்குள் யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்ட ஒரே போட்டியாளர். இவரை பலர் வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பும் படி குரல்கள் ஒலித்தது.
ஆனால் அவரது ரசிகர்கள் இறுதிவரை பாலாஜியை அழைத்து வந்தனர். பைனல் மேடையில் இரண்டாம் இடம் பெற்றார் பாலாஜி. நிகழ்ச்சி முடிந்து மற்றைய போட்டியாளர்கள் குடும்பம், குழந்தை வேலை என ஓட பாலாஜி மட்டும் தனது ரசிகர்களுடன் பேசி வருகிறார். இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பாலாஜி ரசிகர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி வருகிறார்.
நேற்றைய தினம் இலங்கையை சேர்ந்த பாலாஜி ரசிகர் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களை மிக மோசமான கெட்டவராக காட்டினார்கள், நீங்கள் செய்த நல்ல விடயங்களை காட்டாமல் சண்டை பிடித்தது, திட்டியதை எல்லாம் காட்டி வெறுக்க வைத்தார்கள். ஆனால் நீங்கள் நீங்களாக இருந்தது எங்களுக்கு பிடித்தது. உங்களுக்கு வாழ்த்துக்கள் என் கூறி இருந்தார்.
இதனை பார்த்த பாலாஜி ரொம்ப நன்றி. நான் மிகவும் கோபப் படுவேன், சில நேரங்களில் நானே என்னை கேட்டுக்கொள்வேன் நான் நல்லவனா கெட்டவனா என்று, எனது குணம் என்னை தவிர யாருக்காவது பிடிக்குமா என்பதை அறிந்துகொள்ளவே பிக் பாஸ் வந்தேன், நான் நானாகவே இருந்தேன் உங்களுக்கு என்னை பிடித்துப் போனது.
ஆயிரம் வோட் விழுமா என்று சந்தேக பட்ட எனக்கு 6.5 கோடி வாக்குகள், என்னை கிள்ளி பார்த்துக் கொண்டேன். எத்தனை குடும்பங்கள் எனக்கு, உங்களால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.!!