பாக்கியலக்ஷ்மி சீரியலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்.இனி வரும் வாரங்களில் இது தான் நடக்கப் போகிறதாம்.!
பாக்கியலஷ்மி சீரியலில் இனி வரும் வாரங்களில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகின்றது. பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலக்ஷ்மி, இந்த சீரியலில் பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் நிலையில் இதன் கதைகளம் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது,
அம்மா மகன் அன்பில் ஆரம்பித்து தற்போது கள்ளக் காதலில் சென்று கொண்டிருக்கின்றது. பாக்கிலக்ஷ்மியின் கணவர் கதாபாத்திரமான கோபி கதாபாத்திரம் தற்போது பலரிடம் திட்டு வாங்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மாவுடன் கள்ளக் காதலில் இருக்கிறார்.
இதுவரை காலமும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது பாக்கியலக்ஷ்மியின் மாமாவான கோபியின் அப்பாவுக்கு தெரிய வருகின்றது. எதேச்சையாக கோயிலுக்கு செல்லும் கோபியின் அப்பா அங்கு ராதிகாவிற்கு பொட்டு வைக்கும் கோபியை கண்டு அதிர்ந்து போகிறார் தந்தை.
இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இனி எப்போது அடுத்த எபிசோட் வரும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.!