இயக்குனர் பாக்கியராஜின் அருகில் நீண்ட நாள் சினிமாவில் பயணித்த நபர் தூக்கிட்டு தற்கொலை..!
இயக்குனர், நடிகர் என பல அவதாரம் எடுத்தவர் பாக்கியராஜ். ஏராளமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த சிறந்த இயக்குனர்களில் பாக்கியராஜ் அவர்களும் ஒருவர். மனைவி, மகன், மருமகள் என அனைவருமே சினிமா துறையை சார்ந்தவர்கள் தான்.
பாக்கியராஜ் தனக்கென சிலரை அருகில் வைத்திருப்பார் அப்படி பாக்கியராஜ் அவர்களின் அருகில் இருந்தவர் மேக்கப் மேன் கணேஷன். ஆரம்பத்தில் கனேஷனது மேக் அப் பிடித்து போக தனது பல திரைப்படங்களுக்கு கனேஷனையே மேக்கப் மேனாக வைத்தார் பாக்கியராஜ்.
இந்த நிலையில் திண்டுக்கல் நேருஜி நகர் ரயில்வே மேம்பாலம் கம்பியில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் உடலை பரிசோதனை செய்த போது
பாக்கட்டில் இருந்த செல்போனை வைத்து விசாரணை செய்ததில் அது மேக்கப் மேன் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. தேனி போடி ரெங்கனாதபுரத்தை சேர்ந்த கனேஷனின் தற்கொலை தொடர்பாக பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்..!